மிலேனிய யுகத்தின் மின்னியல் கரங்களில்...
அந்திப் பொழுதுகளில், சும்மா கூடிப் பேசிக் கொண்டிருந்த சில நண்பர்களால் மிலேனிய யுகம் பிறந்த அன்று ‘’அபாபீல்கள் கவிதா வட்டம்’ உருவானது.
இதற்கு செயற்சபைத் தலைவராக தீரன். ஆர்.எம். நௌஷாத் அவர்களும், செயற்சபை செயலாளராக ஏ.எம். எம். ஜாபீர் அவர்களும், செயற்சபை பொருளாளராக எம்.எம்.எம். நகீபு அவர்களும் தெரிவானார்கள்..
இவ்வட்டம் சில இலக்கிய நிகழ்வுகளை அவ்வப்போது செய்து வந்தது. . அவற்றில்
யாத்ரா கவியேட்டுக்கான ஆய்வரங்க நிகழ்வு-
‘முஸ்லிம் பூர்வீகம்’
நூலறிமுக விழா-
தலைவர் அஷ்ரஃப்; ஞாபகார்த்த கவிதை பொழி திறன் போட்டி
2004ல் ஒளியின் சிறகுகள்| என்ற மலரை வெளியிட்டது.
அபாபீல்கள் கவிதா வட்டத்தினால் காலாண்டிதழாக ஒரு கவிதைச் சஞ்சிகை வெளியிடல் வேண்டும் என்ற ஜாபீரின் கருது களுக்கு ஏற்ப ''இரண்டாவது பக்கம்'' என்ற இந்த இதழ் வெளியிடப்பட்டது.
ஆர்.எம். நௌஷாத். (தீரன்)
செயற்சபை தலைவர்- அபாபீல்கள் கவிதா வட்டம்.
சாய்ந்தமருது